மூன்றாவது ட்ரைமஸ்டர் என்பது பிரசவத்தின் தன்மையை நிர்ணயிக்கக்கூடிய முக்கியமான காலகட்டம். மூன்றாவது ட்ரைமஸ்டர் அதாவது 7, 8 மற்றும் 9 மாதங்கள் (28 & 40 வாரம் வரை) ஆகும். இதில் 28 & 36 வாரங்கள்வரை மாதம் இரு முறை மருத்துவரிடம் சென்று கட்டாயம் பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
அடுத்து வரும் 36 & 40 வாரங்கள் வரை அதாவது ஒன்பதாம் மாதம், வாரம் ஒரு முறை டாக்டரிடம் சென்று தொடர்ந்து பரிசோதனை கொள்ளவேண்டியது அவசியம்.
37 முதல் 40வது வாரங்களில் ஏற்படும் நார்மல் டெலிவரியை டெர்ம் டெலிவரி என்கிறார்கள் மருத்துவர்கள்.
36 வாரத்துக்குள் பிரசவம் ஏற்பட்டால் அதை ப்ரீ டெர்ம் டெலிவரி என்றும் 40 வாரத்துக்கு மேலானால் அதைப் போஸ்ட் டெர்ம் டெலிவரி என்றும் கூறுகிறார்கள். எனவே, பிரசவக் காலத்தில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பது தாய் சேய் நலத்துக்கும், சுகப் பிரசவத்துக்குமான ஒரு முன்னேற்பாடு நடவடிக்கை. சுகப்பிரவசத்துக்கு அதுவும் முக்கியம்.